tamilnadu

தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தீவிர சிகிச்சை

திருச்சிராப்பள்ளி, ஏப்.25-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ஆத்மநாதன். இவரது மகள் சிவனேஸ்வரி(25). இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விடுதியில் தங்கி லைப் சயின்ஸ் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.புதனன்று காலை வழக்கம் போல் விடுதியில் இருந்துபல்கலைக்கழகத்துக்கு சென்றார். காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் மாணவ. மாணவிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, சிவனேஸ்வரி திடீரென ஆய்வகத்தில் இருந்த பாதரசத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த சக மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார்சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும்இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சிவனேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அவருடன் படிக்கும் சக மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;