தஞ்சாவூர், நவ.30- விவசாயிகள், பொதுமக்கள் தங்களது உரிமைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளி டம் கேள்வியோ, சந்தேகங்களையோ கேட்கும் போது அதிகாரிகள் பொறுப்பான முறையில் உரிய பதிலை வழங்க வேண்டும், இல்லையென் றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சிரயகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மருத்து வக்குடி விவசாயி முருகேசன்: சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டை போல் இந்தாண்டும் கொள்முதல் நிலையங்க ளில் சாக்கு பற்றாக்குறை, கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்படாமை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு முத்தரப்பு கூட்டத்தை உடன் கூட்ட வேண்டும். சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின ருக்கு போன் செய்தாலும், நேரில் சென்று உரம் இருப்பு உள்ளிட்ட தகவல்கள் கேட்டால் பொ றுப்பான பதில் சொல்வதில்லை. கூட்டுறவுத் துறை உயர்அதிகாரிகளுக்கு புகார் செய்தாலும் அவர்களும் கண்டுகொள்வதில்லைஎன்றார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர்: விவசாயிகள், பொதுமக்கள் தங்களது உரி மைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கேள்விகளையோ, சந்தேகங்களையோ கேட்கும் போது அதிகாரிகள் பொறுப்பான முறையில் உரிய பதிலை வழங்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும். சுவாமிமலை கூட்டுறவு சங்க நிர்வாகி கள் குறித்து இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூட்டுறவுத்துறை இணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
நரசிங்கம்பேட்டை விவசாயி ரவிச்சந்தி ரன்: பயிர் கடன் செலுத்தும் போது விவசாயிக ளுக்கு ரசீது வழங்குவதில்லை. அதே போல் விவசாயிகள் செலுத்தும் பயிர் கடனை, கூட்டு றவு சங்கம் இன்ஸூரன்ஸ் நிறுவனத்திடம் மொத்தமாக டிடி எடுத்து செலுத்தி விடுகிறது. அதே போல் இழப்பீடு பெறும் போதும் இன் ஸூரன்ஸ் நிறுவனம் மொத்தமாக இழப்பீடு தொகை கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கி விடு கிறது. கூட்டுறவு சங்கத்தின் எந்த அளவுகோ லின்படி இழப்பீடு தொகை பிரித்து வழங்கு கின்றனர். இதில் பாரபட்சம் உள்ளது. உண்மையாக அதிகம் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு குறைவாகவும், குறைந்தளவு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக வும் இழப்பீடு தொகையை வழங்குகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பயிர் காப்பீடு தொகை செலுத்தியது, இழப்பீடு தொகை பெருவது என அனைத்து நடவடிக்கைகளை யும் சங்கத்தின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். வேட்டமங்கலம் கோ.ஆலயமணி: கொ ள்ளிடம் ஆற்றில் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்டும் பணிக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் யூரியா, பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் உர வியாபாரிகள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வ தை தடுக்க வேண்டும். கோணூளாம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செய்ய கடும் நிபந்தனை தலைவர் விதிப்பதால் அவரை தகுதிநீ க்கம் செய்ய வேண்டும். பள்ளத்தூர் விவசாயி கூத்தலிங்கம்: கல்லணைக் கால்வாய் ஆற்றில் முன்பு 4700 கன அடி தண்ணீர் சென்றது. தற்போது 3 ஆயிரம் கன அடி சென்றால் கூட கரைகள் உடைந்து விடும் என்கின்றனர். இதனால் கடை மடைப் பகுதிக்கு தண்ணீர் செல்வதில்லை. அறங்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத போது, மகாராஜா சமுத்திரம் ஆறு மூலம் ஏன் கடலில் வீணாக தண்ணீர் திறந்து விடுகின் றனர். கூட்டத்தில் பங்கேற்ற பல விவசாயிகளும் தங்களுடைய குறைகளை ஆட்சியரிடம் கூறினர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.