tamilnadu

img

திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிசிடிவி பதிவுகள் வெளியீடு

திருச்சி:
திருச்சியில் லலிதா ஜூவல்லரியில் நிகழ்ந்த நகை கொள்ளை தொடர்பாக இரண்டு புதிய சிசிடிவிபதிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் புதனன்று 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகப்படும்  வகையில் வட மாநிலத்தவர்கள் சிலர் புதுக்கோட்டை க்கு தப்பிச்சென்ற தகவல் கிடைக்கவே போலீசார் புதுக்கோட்டைக்குச் சென்று,அங்குள்ள டைமன்ட் தங்கும்விடுதியில் இருந்த வட மாநிலத்தவர் 5 பேரை அறையில் வைத்து காவல்துறை யினர் சுற்றி வளைத்தனர். அவர்களில், அப்துல்லா சேக் என்பவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றதால் தலையில் அடிபட்டது. அவரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கிற்கும், தற்போது பிடிபட்டுள்ள வர்களுக்கும் தொடர்பு இருப்பது போல் தெரிய வில்லை என்று காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக இரண்டு புதிய சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன. கொள்ளையர்கள் நகை திருடும் காட்சிகள் அந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

;