tamilnadu

தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

தடுப்புக் காவலில் 4 பேர் கைது  

தஞ்சாவூர், மே 28-தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் உள்ளூர்கிராமம் ஸ்டேட் பேங்க் காலனியில் வசிக்கும் என்.கே.பி.செந்தில்குமார்(49), சங்கராயர் தோட்டம் பெரியதம்பி நகர் டாக்டர் மூர்த்தி ரோட்டில் வசிக்கும் வெங்கடேசன்(34), விளந்தகண்டம் கிராமம், சத்திரம் காலனியில் வசிக்கும் ஜீவகருணா என்ற முகமது சமீர்(23), இதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன்(43) ஆகிய நால்வரை திருச்சி மத்தியசிறையில் தடுப்பு காவலில் வைத்திட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.

பேராவூரணி வட்டத்தில் ஜமாபந்தி

தஞ்சாவூர், மே 28-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில்(ஜமாபந்தி) வருவாய் தீர்வாய கணக்குகள் தணிக்கை வியாழக்கிழமை தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி வரை முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக் கண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.  மே.30-ல் பெருமகளுர் சரகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கும், 31-ல்குருவிக்கரம்பை சரக கிராமங்களுக்கும், ஜூன் 4-ல் ஆவணம் சரக கிராமங்களுக்கும், 6-ல் பேராவூரணி சரக கிராமங்களுக்கும் கணக்கு தணிக்கை நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாகஅளித்து தீர்வு காணலாம் என பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். 


தஞ்சை மாவட்டத்தில் நீதிமன்ற ஊழியர் பணியிடம்  

தஞ்சாவூர், மே 28-தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்,
மசால்ஜி போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களை http://districts.ecourts.gov.in/tn/thanjavur என்ற இணையதள முகவரியில் “Latest Announcement” என்ற தலைப்பை
பார்த்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.அய்யப்பன்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 

பாபநாசம் அணையில்  செத்து மிதக்கும் மீன்கள்

கடும் துர்நாற்றம் 

 திருநெல்வேலி, மே 28-பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்களால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல்அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின்தாக்கம் அதிகமாக இருக்கிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்த போதிலும் இந்த ஆண்டின் கோடை தாக்குதல் மற்றும்கோடை மழை பெய்யாததால் அணைகளின் நீர்ப்பிடிப்புபகுதிகள் வறண்டு போய்விட்டன. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. அதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இதில்பிரதான அணையான பாபநாசம் அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி ஆகும். எந்த ஆண்டிலும் இல்லாதஅளவிற்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் பாபநாசம் அணை சிக்கி தவித்து வருகிறது.அணையின் தற்போதைய நீர்மட்டம் 9 அடியாக குறைந்துள்ள போதிலும் அணை இதுநாள் வரைக்கும் தூர்வாரப்படாததால் சில அடி உயரத்துக்கு சகதி நிரம்பி கிடக்கிறது. இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் அணையில் தேங்கி கிடக்கும் தண்ணீருக்குள் /ஏற்பட்டிருக்கும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் கொத்து கொத்தாகபரிதாபமாக செத்து மிதக்கின்றன. அணைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததோடு இருக்கும் தண்ணீரும் வெகுவாக மாசடைந்து மீன்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மீன்கள் நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கத்தொடங்கின. இவ்வாறு இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள்அணையின் கரையோரம் மிதப்பதால் அவை அழுகி கடும்துர்நாற்றம் வீசுகிறது.மேலும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் சிறிதளவு தண்ணீரும் துர்நாற்றத்துடன் செல்வதால் தாமிரபரணியில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக மாறும் நிலை உள்ளது. செத்து மிதக்கும் மீன்களைஅகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இதுவரைஎடுக்கவில்லை. எனவே இந்த மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அணையில் உள்ள சகதியை அகற்றி தூர்வார வேண்டும்.இதன் மூலம் தண்ணீர் கொள்ளளவு அதிகரிப்பதோடு அணையில் உள்ள நீர் சுகாதாரமானதாக மாறும் என்றுசமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

சோலார் மின்சாரம்  தாக்கி குட்டி யானை  சாவு

திருநெல்வேலி, மே 28-கடையநல்லூர் அருகே காட்டுப்பகுதியில்  சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை  இறந்தது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர்  வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்  அமைந்துள்ள  மேலகடையநல்லூர் அருகே உள்ளது  முந்தல்காடு.அங்கே உள்ள சுப்பையா நாடாருக்கு சொந்த மாந்தோப்புஒன்று உள்ளது. இந்த மாந்தோப்புக்குள்  திங்களன்று இரவுஒரு வயதுடைய குட்டியானை ஒன்று புகுந்தது. அப்போதுசோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை  இறந்தது.  உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்கு புகுந்த காட்டுயானை  மா மரங்களில் உள்ள மாங்காய்களை  பறித்து  தின்றுவிட்டு வாய்காலில் சென்ற தண்ணீரை குடிக்க சென்றபோதுஅந்த வழியாக சென்ற சோலார் கம்பியின் மின்சாரம் குட்டியானையின் மீது பாய்ந்தது .இதில் காட்டு குட்டியானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கடையநல்லூர்  வனத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் திருமால்  கடையநல்லூர்  வனச்சரகர் செந்தில்குமார் , வனவர் சரவணன்,மேக்கரை வனவர் அருமைக்கொடி ஆகியோர் தலைமையில்  வன காவலர்கள் சசிக்குமார், ஆறுமுகம்,  ராமச்சந்திரன், பால்ராஜ்  ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சோலார் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.