சீர்காழி, ஆக 2- சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா நடைபெற்றது. இந்தியாவின் முதல் பெண் மருத்து வர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளையொட்டி நடை பெற்ற விழாவுக்கு அரசு தலைமை மருத்துவர் கே.தேவ லதா தலைமை வகித்தார். மருத்துவர்கள் அருண் ராஜ்குமார், மருதவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை மருந்தாளுநர் ஆர். முரளி வரவேற்றார். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஆர்.மகேந்திரன், சீர்காழி டி.எஸ்.பி ஆர்.வந்தனா ஆகியோர் பேசினர். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் செய லாளர் கே.வி.ராதாகிருஷ்ணன், சீர்காழி ரோட்டரி சங்க தலை வர் எம்.பழனியப்பன், சுபம் வித்யா மந்திர் பள்ளி தாளா ளர் ஜி.சுதேஷ், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம், ரத்தக் கொடை ஒருங்கி ணைப்பாளர் அப்பாஸ்அலி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், கொழு கொழு குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊடக துறை சார்பில் டி.யூ.ஜெ மாவட்ட தலைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் டி.சௌந்தர பாண்டியன் அரசு மருத்துவமனை சேவைகளை பாராட்டி கவிதை வாசித்தார். அப்துல்கலாம் நர்சரி கல்லூரி மதிய ழகன், பேராசிரியர் சசிகுமார், இந்தியாவிற்கான மக்கள் இயக்கம் சார்பில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க தஞ்சை கோட்ட தலைவர் எஸ்.எல்.ஸ்ரீதர் பங்கேற்றார்கள். முன்னதாக அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மூலிகை தோட்டத்தை இணை இயக்குனர் டாக்டர் ஆர். மகேந்திரன் பார்வையிட்டார். பசுமையான மருத்துவமனை, தூய்மையான மருத்துவமனை என்ற இயக்கம் ஆரம்பி க்கப்பட்டு அதற்கு சித்த மருத்துவர் ஷாகுல் ஹமீது தலைவராக நியமிக்கப்பட்டார். செவிலியர் கண்காணி ப்பாளர் இசபெல்லா நன்றி கூறினார். மருத்துவமனை ஊழி யர்கள் வளர்மதி, செல்வகுமார், செந்தில் குமார், சுந்தர்ரா ஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.