தரங்கம்பாடி ஜூலை 6- நாகை மாவட்டம் திருக்கடையூரில் சிறப்பு மருத்து முகாம் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் சனியன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ., பவுன்ராஜ் முகாமை துவக்கி வைத்து உரையாற்றினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், திருக்கடையூர் அபிராமி லயன்ஸ் சங்கத் தலைவர் உதயக்குமார், சு.கலியபெருமாள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் பாலையா மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். முகாமில் 6 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 20 பேருக்கு சித்தா- சஞ்சீவி பெட்டகங்களை எம்.எல்.ஏ.,வழங்கினார்.