tamilnadu

img

அரியலூரில் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்திற்கு பின்புறம் குப்பை

அரியலூரில் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்திற்கு பின்புறம் நகர்ப்புறங்களில் இருக்கும் அனைத்து குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு தொற்று நோய்கள் பரவுகிற நேரத்தில் தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் கடந்து செல்லும் பேருந்து நிலையம் அருகில் குப்பை கொட்டுவதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்த வில்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.