திருச்சிராப்பள்ளி, ஆக.27- திருச்சி க்யூ மெட் மருத்துவமனையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன், நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி அரசு மருத்துவமனை அருகில் கடந்த 2 வருடமாக பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்றி வருவது க்யூ மெட் மருத்துவமனை. இங்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சிறுநீரகங்கள் செயலிழந்த ஏழை, எளிய நோயாளிகளுக்கு இலவசமாகக் இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்வதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச சேவையை ஏழை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பேட்டியின் போது மருத்துவமனை செய்தி தொடர்பாளர் இலியாஸ் உடனிருந்தார்.