திருச்சிராப்பள்ளி, மே 29-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், தமிழ்நாடு அரசு நுண்கதிர் நுட்பநர் சங்க துணைத் தலைவருமான தோழர் விஜயராகவன் கடந்த செவ்வாய் அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.இவர், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசனின் மைத்துனர் ஆவார்.கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக அன்னாரது உடல் திருச்சி ஸ்ரீரங்கம்மூலத்தோப்பு மேலூர் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர்,மாநகர் மாவட்டச் செயலாளர்ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சிவராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் வீரமுத்து, ஸ்ரீரங்கம் பகுதிசெயலாளர் வேளாங் கண்ணி, தீக்கதிர் திருச்சி பதிப்பு முன்னாள் பொதுமேலாளர் அனந்தராஜன், பொது மேலாளர் பன்னீர் செல்வம், பிஎஸ்எல்எல் டிஓடிஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் ஜான்பாட்ஷா, கரூர் மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழுஉறுப்பினர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினர்.அன்னாரது உடல் கொள்ளிடக்கரையில் உள்ள திருமங்கை மன்னன் படித்துறையில் புதனன்று காலை தகனம் செய்யப்பட்டது.