பெரம்பலூர், ஆக.23- பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் மழலையர்கள் பல்வேறு வேடமணிந்து வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்ட உரியடி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் சிவக்குமார், பள்ளி துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், ஆசிரியைகள் ஹேமா, சந்திரோதயம் உள்பட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.