tamilnadu

பெண் தற்கொலை முயற்சி

திருச்சிராப்பள்ளி, ஏப்.30-திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ்பாண்டியன். இவரது மனைவி செரீன் பிரேமா (24). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு மனமுடைந்த நிலையில் செரீன் பிரேமா காணப்பட்டுள்ளார். இந்நிலையில் செரீன் பிரேமா தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் மீட்கப்பட்ட அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;