திருச்சி திருவெறும்பூர் 17வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் யமுனாதேவி போட்டியிடுகிறார். இதையொட்டி சிபிஎம் பர்மா காலனி கிளைச் செயலாளர் பாலுசாமி மகன் ஸ்ரீசுதன் தேர்தல் நிதியாக ரூ.10 ஆயிரத்தை திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் நடராஜனிடம் திங்களன்று வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ், பெல்நகர் கிளைச் செயலாளர் மணி, கிளை உறுப்பினர் சிவராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.