tamilnadu

கல்விச் சீர் வழங்கும் விழா

 மண்ணச்சநல்லூர், ஆக.17- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், தில்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை மனோரெஜினா வரவேற்றார். கிராம முக்கியஸ்தர் ராமசாமி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். கிராம மக்கள் மற்றும் பெற்றோர் சார்பில் பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், நாற்காலி மற்றும் இருக்கை தளவாடங்கள், பாத்திரங்கள், பீரோ, மேப், தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட பொருட்களை மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பள்ளிக்கு வழங்கினர்.  விழாவில் கிராம முக்கியஸ்தர்கள் வீரமலை, ராஜாராம், டி.பி.கண்ணன், சண்முகம், லோகநாதன், ஹரிதாஸ், ஆண்டி, ரெங்கசாமி, அமர்பாட்சா, விஜயகுமார், யோகசித்ரா, லெட்சுமி சிவகுமார் உள்பட சுயஉதவிக் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளின் கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.