tamilnadu

img

மணப்பாறை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 1- திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 20-ஆவது வார்டு நேதாஜி நகரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 20வது வார்டு கிளை சார்பில் திங்களன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு தொடங்கி வைத்தார். நிர்வாகி பாண்டி, சூளியாபட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் துளசிவேல் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.