மின் விநியோகங்களில் தனி யார்மயத்தை புகுத்திடும் விதமாக முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்க ளில் தனியார்மயத்தை புகுத்திட மத்திய அரசு அறிவிப்பு செய்துள் ளது. இந்த நடவடிக்கை ஏனைய மாநிலங்களிலும் அடுத்து புகுத்தப் படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த் தும், உடனடியாக இந்நடவடிக் கையை கைவிடக் கோரியும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரியும் அனைத்து மின்வாரிய அலுவலகங்கள் முன்பு திங்களன்று 10 நிமிட ஒலி முழக்கமிட, தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்ததை தொடர்ந்து. மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய பொறியாளர் சங்க திருச்சி மண்டல செயலாளர் சா.சம்பத் தலைமை யில் அனைத்து தொழிற் சங்கத்தி னர் ஒலி முழக்கம் எழுப்பினர். நிகழ்ச்சியில் சம்மேளன கோட்டச் செயலாளர் சூ.ஜெயபால், தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் சு.காளிதாஸ், மத்திய அமைப்பு திட்ட தலைவர் சி. சகாயராஜ், பொறியாளர் கழக கோட்ட செயலாளர் சு.சங்கர் குமார் மற்றும் அனைத்து சங்க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.