புதுக்கோட்டை, நவ10- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக் கோட்டை மாவட்ட அளவிலான துளிர் விநாடி-வினா போட்டி புதுக்கோட்டையை அடுத்த செந்தூரான் பொறியியல் கல்லூரி யில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. 4, 5 வகுப்புகளுக்கான தமிழ்வழி தொடக்கநிலையில் முத லிடத்தை ராயவரம் கிராம சேவாசங்கம் தொடக்கப் பள்ளி யும், இரண்டாமிடத்தை நம்புரான்பட்டி அரசு தொடக்கப் பள்ளியும், மூன்றாமிடத்தை வேங்கைவயல் அரசு தொடக்கப் பள்ளியும், ஆங்கில வழியில் முதலிடத்தை கறம்பக்குடி ரீனா மெர்சிமெட்ரிக் பள்ளியும் பெற்றன. 6, 7, 8 வகுப்புகளுக்கான நடுநிலை தமிழ்வழியில் மேலப் பட்டி அரசு நடுநிலைப் பள்ளி, பூங்குடி அரசு நடுநிலைப் பள்ளி, இலைகடிவிடுதி அரசு நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளும், ஆங்கிலவழியில் கீழாநிலைக்கோட்டை அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப் பள்ளி, கறம்பக்குடி ரீனா மெர்சி மெட்ரிக்பள்ளி, கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் முறையே மூன்று இடங்களைப் பெற்றன.
9,10 வகுப்புகளுக்கான உயர்நிலை தமிழ்வழியில் விராலி மலை அரசு மேல்நிலைப் பள்ளி, ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளி, மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளி, ஆங்கிலவழியில் நகரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கறம்பக்குடி ரீனா மெர்சி மெட்ரிக்பள்ளி, கீழாநிலைக் கோட்டை அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 11,12 வகுப்புகளுக்கான மேல்நிலை தமிழ்வழியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நகரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி, ஆங்கில வழியில் புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மூன்றாமிடத்தை புதுக் கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி களும் பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா விற்கு கல்லூரியின் தலைவர் ஏ.வி.எம். செல்வராஜ் தலைமை வகித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், செந்தூரான் பொறி யியல் கல்லூரியின் முதல்வர் கே.கணேஷ்பாபு, அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஆர்.விவேகானந்தன், அ.மணவாளன், மா.வீரமுத்து மா.குமரேசன், கே.சர்பிரசாதம்,; மா.சிவா னந்தம், ரெ.பிச்சைமுத்து உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் மு.முத்துக்குமார் வர வேற்க, பொருளாளர் ஈ.பவனம்மாள் நன்றி கூறினார்.