திருச்சிராப்பள்ளி, நவ.6- தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளு வர் சிலையை அவமரியாதை செய்த விஷமி களை கைது செய்யக் கோரியும், மதச் சாயம் பூசி இழிவு செய்பவர்களை கண்டித்தும் புத னன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிங்காரத்தோப்பிலுள்ள தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வாலிபர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் பா.லெனின் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் ஜெய்குமார், நிர்வாகிகள் தர்மா, சந்துரு, பழனிவேல், அவங்கராஜ் மற்றும் தமுஎகச மாநகர தலைவர் இளங்குமரன், அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.