திருச்சிராப்பள்ளி, ஜூன் 4-திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி.முதல் கீழ கல்கண்டார்கோட்டை வரைசாலை அமைத்து சாலையின் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கும்பணியில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டி ஏழை வீடுகளை இடித்தும் பணக்காரர்கள் வீட்டில்லஞ்சம் பெற்று சாலை விரிவாக்க பணியில் முறைகேடுகளில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறையை கண்டித்தும் மேலகல்கண்டார் கோட்டை பரமசிவம் தெருவில் இருந்து கீழகல்கண்டார்கோட்டை ஆற்றுப்பாலம் வரை தார்சாலை விரிவாக்க பணியில் பாரபட்சம் காட்ட கூடாது. தரமான தார்சாலை, சாக்கடைகால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று மேலகல்கண்டார்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கிபொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பகுதிக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, முத்துக்குமார், பாலமுருகன், கிளை செயலாளர்கள் ஜெயந்தி, கணேசன், சேகர், டிஆர்இயுமகேந்திரன், ராஜா, கவியரசன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்றுக்குள்(புதன் கிழமை) கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.