திருச்சிராப்பள்ளி, மார்ச் 3- திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் தளுகை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படவில்லை எனக் கூறி கடந்த ஒரு மாத காலமாக வேலை மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் த.மங்கப்பட்டி புதூர் கிளைச் செயலாளர் ரஷ்யா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றியப் பொருளாளர் பி.மங்கள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.