தரங்கம்பாடி ஆக23- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பரசலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும், இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரவையின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் எம்.என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலையா, பேரவைத் துணைத்தலைவர் பாண்டுரங்கன், பொருளாளர் ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் இராம சேயோன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பரசலூர் கார் ஓட்டுநர் சங்கத் தலைவர் கண்ணன் தலைமையில் ஓட்டுநர்கள் மற்றும் வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.