புதுக்கோட்டை, பிப்.23- ஒன்றிய அரசின் விவ சாய விரோத பட்ஜெட்டைக் கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள், வேளாண் நலத் திட்டங்கள் உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். நேரடிக் நெல் கொள்முதல் நிலையங்க ளில் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய் யாமல் அந்தந்தப் பகுதி விவ சாயிகளின் நெல்லையே கொள்முதல் செய்ய வேண் டும். நிலக்கடலைக்கு கட்டுப் படியான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். வம் பன் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் கே.பெர மையா, சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச் சாமி, பொருளாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர் த.அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் எல்.வடிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.சுசிலா உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.