tamilnadu

img

வீட்டு வரி உயர்வை ரத்து செய்யக் கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, செப்.9- திருச்சி மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட வரியை நிறுத்தி வைத்திட வேண்டும். வரி உயர்வு தொடர்பாக வீட்டு உரிமையாளர் களுக்கு நோட்டீஸ் கொடுப்பதையும், கைபேசியில் தொடர்பு கொண்டு வரியை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், 15 தினங்களுக்குள் வரியை செலுத்தாவிடில் சொத்து கள் ஜப்தி செய்யப்படும் என மாநக ராட்சி நிர்வாகம் மிரட்டுவதை கண் டித்தும் திருச்சி மாநகர குடியிருப் போர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பினர் மாநகராட்சி அலுவல கத்தை திங்களன்று முற்றுகை யிட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங் கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர்கள் லெனின், சக்தி வேல், சுப்ரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத் தில் ஸ்ரீரங்கம் கோட்ட முருகேசன், பொன்மலை கோட்ட நடராஜன், சர வணன், மோகன், அரியமங்கலம் கோட்ட துரைக்கண்ணு, முருகையா, கோ-அபிஷேகபுரம் கோட்ட வெங்கடாசலம், சச்சிதாநந்தம், குமார் உள்பட 200-க்கும் மேற்பட் டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வீட்டுவரியை குறைக்க வலியுறுத்தி கோஷமிட்ட னர்.  பின்னர் அவர்கள், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க அலு வலகத்திற்குள் செல்ல முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொன் மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள், கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், வீட்டு உரிமையாளர்களின் மனுக்களை அரசிற்கு பரிந்துரை செய்வது. மேலும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப் பட மாட்டாது எனவும் உறுதியளிக் கப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.  இதுகுறித்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லெனின் நிரு பர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 60 வது வார்டு வரை 50 சதவீதம் வீட்டு வரி உயர்வும், 61 முதல் 65 வரை உள்ள வார்டுகளுக்கு 10 முதல் 15 மடங்கு வரி உயர்வும் மாநகாட்சி அறிவித்துள்ளது. மேலும் இதை முன்தேதியிட்டு 1 முதல் 60 வார்டுகளுக்கு ஒரு வரு டத்திற்கும், 61 முதல் 65 வரை உள்ள வார்டுகளுக்கு இரண்டு வருடத் திற்கும் அரியர்ஸ் வசூல் செய்ய முடி வெடுத்திருப்பது வீட்டின் உரிமை யாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.  தமிழக சட்டமன்றத்தில் உள் ளாட்சித் துறை அமைச்சர் வீட்டுவரி உயர்வை மறுபிசீலனை செய்யப் படும் என்றும், திருச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் வரி உயர்வு மறுபரி சீலனை செய்யப்படும் என மக்க ளுக்கு உறுதியளித்துள்ள நிலை யில் 15 தினங்களுக்குள் வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் மிரட்டுவதை குடியி ருப்போர் நலச்சங்களின் கூட்ட மைப்பு வன்மையாக கண்டிக்கிறது என்றார்.