tamilnadu

img

அவுட்சோர்சிங் முறையை கைவிடக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 16- ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சேவை பாதிப்பு மற்றும் ஊழல் வாயப்புக்கு வழிவகுக்கும் அவுட்சோர்சிங் டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும். விருப்ப ஓய்வுக்கு பிறகு ஆட்பற்றாக்குறை  நிலவும் சமயத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பிஎஸ்என்எல்இயு மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வெள்ளியன்று திருச்சி மண்டல தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போரா ட்டத்திற்கு பிஎஸ்என்எல்இயு மாவட்ட தலைவர் தேவராஜ், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி பிஎஸ்என் எல்இயு மாவட்ட செயலாளர் அஸ்லம் பாஷா, தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் பேசினர். ஓய்வு  பெற்ற சங்க நிர்வாகிகள் சின்னை யன், ருக்குமாந்தன், பால்ராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.