tamilnadu

img

ரூ.7,500 நிவாரணம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

முசிறி, ஜூன் 6- திருச்சி மாவட்டம், முசிறி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பாக அகில இந்திய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி நல்லுசாமி, தா.பேட்டை விவசாயத் தொழிலா ளர் சங்க நிர்வாகி தங்கவேல்தலைமை வகித்தனர்.  ரூ. 7500 நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர். சங்க உறுப்பினர்கள் வீரவிஜயன், சந்திரமோகன், ராஜா, கிருஷ்ணன், முருகே சன் உள்பட திரளானோர் கலந்து கொண்ட னர். பின்னர் முசிறி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

;