திருச்சிராப்பள்ளி, நவ24- திருச்சி புறநகர் மாவட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தின் 2ம் ஆண்டு பேரவை கூட்டம் சனிக்கிழமை அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நவமணி தலைமை வகித்தார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் சம்பத் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் சமர்ப்பித்தார். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாநில செயலாளர் சிவாஜி நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தில் பெட்ரோல்- டீசல்- கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சாலைப் போக்குவரத்து மசோதா வை திரும்பப் பெற வேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய தலைவராக நவமணி, செயலாளராக சம்பத், பொருளாளராக சந்திரசேகர் உள்பட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் முசிறி, மண்ணச்ச நல்லூர், டோல்கேட், சமயபுரம், டோல்பிளாசா, மணப் பாறை, புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.