சீர்காழி, நவ.29- சீர்காழி அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் பூங்கா ஒதுக்கீடு செய் யப்பட்ட இடத்தில் உள்ள ஆபத்தான குட்டையை மூட கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே தண்ணீர்பந்தல் கிராமம் விஜயநகரில் 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரின் மையப் பகுதியாக உள்ள இடத்தில் சிறுவர் பூங்காவுக்காக விதி முறைப்படி இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது. அந்த இடத்தில் சிறுவர் கள் மற்றும் குழந்தைகள் தினந்தோ றும் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில், கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் எடுத்து வரப்பட்டு அந்த நீரை தேக்கி வெளி கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டிகட்டுவதற்காக அதிகாரிகள் சார்பில் சிறுவர் பூங்கா இருந்த இடத்தில் உள்ள விளையாட்டு கருவி கள் அகற்றப்பட்டு அதே இடத்தில் பொக்லைன் எந்திரம் கொண்டு 10 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் வெட்டப்பட்டது. இதனையறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்தில் நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக உயர் அதிகா ரிகளின் உத்தரவின்படி நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவது நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே இடத்தில் தோண்டப்பட்ட பள்ளம் குட்டைப் போல் உள்ளது. எப்போதும் 10 அடி ஆழத்திற்கு இதில் தண்ணீர் இருந்து கொண்டேயிருப்பதால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனையே இருந்து வரு கின்றனர். மேலும் இந்தக் குட்டையில் தொ டர்ந்து தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உள்ளது. இக்குடையில் உள்ள நீரிலி ருந்து வீசும் துர்நாற்றம் சுற்றுப்புறச் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நகரில் சிறுவர் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒன்றிய அலு வலக நிர்வாகம் சார்பில் விதிக்குப் புறம்பாக குட்டை தோண்டப்பட்டது. 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் எப்போ தும் தேங்கியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை பெற்றோர் அச்சத்து டனையே பாதுகாத்து வருகிறோம். இந்தப் பகுதி தற்பொழுது பாது காப்பற்ற இடமாக இருந்து வருகிறது. கடந்த திங்கள் கிழமையன்று இப்பகு தியைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை இந்தக் குளத்தில் விழுந்து விட்டது. அதனை அங்குள்ளவர்கள் பார்த்து விட்டதால் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் தூக்கிச் சென்று காப்பாற்றி னோம். மீண்டும் அசம்பாவிதம் ஏற்படு வதை தவிர்க்கவும் உயிர்ச் சேதத்தை தடுக்கும் விதத்திலும் பூங்கா உள்ள இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி பழையபடி பூங்கா அமைக்க உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளதாகத் தெரிவித்தனர்.