திருத்துறைப்பூண்டி, பிப்.25- மார்க்சியம் குறித்து அவதூறாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகரச் செயலாளர் கே.கோபு தலை மை வகித்தார். ஒன்றியச் செயலாளர் டிவி.காரல் மார்க்ஸ் முன்னிலை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.ஜோதிபாசு, நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.