tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சிபிஎம் பாராட்டு

புதுக்கோட்டை, ஜன.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர்.  புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண் டார்கோவில் ஒன்றியம் பாப்புடையான் பட்டி ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் தேர்தலில் ஆர்.அல்லிமுத்து வெற்றிபெற் றுள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளை செயலா ளராகவும் தற்பொழுது உறுப்பினராகவும் உள்ளார். அல்லிமுத்துவை கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் சால்வை அணிவித்து பாராட்டினார். உடன் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற் றும் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை ஊராட்சி குப்பையன் பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக் ம.கவிதா செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியில் உறுப் பினராக உள்ளார். இவரது கணவர் மலை யாண்டி கட்சியின் முன்னாள் ஒன்றியச் செய லாளர். மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் சார்வை அணிவித்து பாராட்சினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். உடையப்பன், ஏ.ராமையன், எஸ்.சங்கர், கே. சண்முகம், வி.துரைச்சந்திரன், சி.அன்பு மணவாளன் ஒன்றியச் செயலாளர் டி. லட்சாதிபதி உள்ளிட்டோர் உள்ளனர். கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி மன்ற உறுப்பினராக வும் ஊராட்சி மன்ற துணை தலைவராக வும் கே.சாந்தி போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டுள்ளார். இவர் கட்சியில் உறுப்பி னராகவும், ஜனநாயக மாதர் சங்கத்தில் ஒன்றியத் தலைவராகவும் உள்ளார். இவ ரது கணவர் ம.கார்த்திக்கேயன் கட்சயின் கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு உறுப்பி னராகவும், அரசுப் போக்குவரத்துக் ஊழியர் சங்கம்(சிஐடியு) புதுக்கோட்டை மண்டல தலைவராகவும் உள்ளார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் சால்வை அணிவித்து பாராட்டினார். ஒன்றி யச் செயலாளர் வி.ரெத்தினவேல், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பி.வீராச்சாமி, வி. ரெத்தினவேல் உள்ளிட்டோர் உள்ளனர். 

;