tamilnadu

img

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை, ஜூன்.23- பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. டிவிஎஸ் கார்னரில் தொடங்கிய போட்டியில் மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டியுடன் வீரர்கள் பங்கேற்றனர். கரிச்சான் மாடு, நடு மாடு, பெரிய மாடு என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டுவண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியை வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.