tamilnadu

img

தோழர் தே.இலட்சுமணன் படத்திறப்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், கட்சியின் முன்னாள் மாநிலச் செயற்குழு உறுப்பினர், பல்வேறு இயக்கங்களின் ஸ்தாபகர் தோழர் தே.இலட்சுமணன் படத்திறப்பு நிகழ்ச்சி நகை சி.பி.எம். மாவட்டக்குழு அலுவலகமான ‘வெண்மணி தியாகிகள் நினைவு’ இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து புகழுரையாற்றினார். சு.மணி, சொ.கிருஷ்ணமூர்த்தி, எம்.குருசாமி, பி.முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.