tamilnadu

சிஐடியு அகில இந்திய மாநாட்டு ஆலோசனை கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.11- சிஐடியு அகில இந்திய மாநாடு ஜன.23 முதல் ஜன.27 வரை சென்னையில் நடை பெறுகிறது. இதையொட்டி பொன்மலை யிலிருந்து தியாகிகள் ஜோதி பயணம் புறப்ப டுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம்  டிஆர்இயு ஓபன் லைன் மற்றும் ஒர்க்சாப்  கோட்டங்களின் கூட்டுக்கூட்டம் சனிக்கிழமை  பொன்மலை சங்கத் திடலில் டிஆர்இயு கோட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஜன.21 அன்று மாலை 4 மணிக்கு பொன்மலை சங்கத்திடலில் ஜோதி பயண நிகழ்ச்சியை தொடங்குவது என்றும் ஆரம்ப த்தில் மாநாடு குறித்து ஜோதி பயணம் குறித்து  பொதுக்கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடத்துவது என்றும் 200-க்கும் மேற்பட்ட டூவீலர்களில் ஜோதி பயணத்தை தாரை தப்பட்டை உடன் அழைத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஜன.27அன்று பொதுக்கூட்டத்திற்கு 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்கச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் சிறப்ப ம்சங்கள் குறித்து சிஐடியு மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் பேசினார்.

;