தஞ்சாவூர், பிப்.19- தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் சோழர் கால புத்தர் சிலை இடம்பெற்றுள்ளது என வரலாற்று ஆய்வா ளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் பெருமுயற்சியால் பழைய மாவட்ட ஆட்சியரகம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள் ளது. அங்கு அழகிய கற்சிலைகள், செப்புத் திருமே னிகள், இசைக்கருவிகள், விவசாயப் பொருட்கள், நில அளவை சாதனங்கள், காவிரி நதியின் டெல்டா காட்சியுடன் கல்லணைக் காட்சி போன்ற பல அரும் பொருள்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கற்சிலைகளை ஆராய்ந்தபோது, 10 - 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் கால புத்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. அமர்ந்த கோலத்தில் தியான நிலையில் உள்ள இப்புத்தா சிலை உடையாமல் முழுமையாக இருக்கிறது. தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணி கள் காண வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த அருங்காட்சியகம்.