tamilnadu

img

மண்ணச்சநல்லூரில் சிபிஎம் தெருமுனை பிரச்சாரம்

மண்ணச்சநல்லூர், ஏப்.9-பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோட்டில் தெருமுனை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர். பிரச்சாரத்திற்கு மண்ணச்சநல்லூர் மேற்குஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பூமாலை, போக்குவரத்து ஓய்வூதியர் சங்கநிர்வாகி அருணாச்சலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரேசன், கருணாநிதி, முருகேசன், நல்லையன், சேகர்,மனோகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக திருவெள்ளறையில் கூட்டணி கட்சி வேட்பாளர் பாரிவேந் தரை ஆதரித்து வாக்கு கேட்டு தெருமுனை பிரச்சார கூட்டம் கடை வீதியில் நடந்தது. குன்னாக்குளம் கிளைச் செயலாளர் ஆனைமுத்து தலைமை வகித்தார். திருவெள்ளறை கிளைச் செயலாளர்ஜி.அன்பழகன் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.முருகேசன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், திமுகநிர்வாகி சரவணன் ஆகியோர் பிரச்சாரத்தை விளக்கி சிறப்புரையாற்றினர். பிரச்சாரக் கூட்டத்தில் சிபிஎம் பி.விருதாச்சலம், பி.ரெங்கநாதன், தம்மனான், செல்லையா, ரமேஷ் மற்றும் கூட்டணிகட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

;