tamilnadu

img

கந்தர்வகோட்டையில் சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

புதுக்கோட்டை, ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருச்சி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் கந்தர்வகோட்டை, அன்னவாசல் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.திருச்சி வேட்பாளர் சு.திருநாவுக்கரசரை ஆதரித்து கந்தர்வகோட்டையில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கட்சிஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அரசியல் விளக்கவுரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், வி.துரைச்சந்திரன், குன்றாண்டார் கோவில் ஒன்றியச் செயலாளர் கே.தங்கவேல் மற்றும் தோழமைக்கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர்.கரூர் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அன்னவாசல் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்துக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையாதலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.ரெங்கசாமி, எம்.ஜோஷி, அழகர், வெள்ளைச்சாமி, ரெங்கசாமி, தேவராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

;