tamilnadu

img

கார்கில் போர் வெற்றி தின விழா

கரூர், ஜூலை 28-  கார்கில் போர் இருபதாம் ஆண்டு வெற்றி விழா கரூரில் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பில் ஸ்டூடண்ட்ஸ் பார் சோல்ஜர்ஸ், சிஸ்டர்ஸ் பார் ஜவான்ஸ் அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்றது. பரணி பார்க் கல்விக் குழும வளாகத்தில் ராணுவ வீரர்களின் வீரம், தியாகத்தை நினைவு கூரும் வகையில் நாடகம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற கார்கில் போர் வெற்றி தின விழா பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். பரணி பார்க் கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனை குழு முன்னாள் உறுப்பி னரும் பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வரு மான முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பரணி வித்யாலய முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளி சேகர், பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, நிர்வாக அலுவலர் சுரேஷ், தமிழக சாரணர் இயக்க மாநில தலைமையக பயிற்சியாளர்கள் ராகவன், துரை, அமானுல்லா, தூயவன், சக்தி, மஞ்சுளா, ரூத்பேபி உள்பட ஐநூற்றுக்கும் மேற்பட்ட சாரண சாரணியர் பேரணியில் கலந்து கொண்டனர்.