கும்பகோணம், நவ.22- பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவ னங்களை பாதுகாக்க வலியுறுத்தி மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தஞ்சை மாவட்ட குழு சார்பில் கும்பகோணம் காந்தி பார்க் எதிரில் தெருமுனை கூட்டம் நடை பெற்றது. சங்க மாவட்ட தலைவர் எம். ஜவஹர்லால் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்ட சங்க துணை தலை வர் எஸ்.சுப்ரமணியன், மண்டல இணைச் செயலாளர் பி.ராஜமகேந்தி ரன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் குடந்தை சேகர், தஞ்சை சத்தியநாதன், சாலை போக்கு வரத்து சம்மேளன மாநில துணை செய லாளர் பி. பார்த்தசாரதி, ஓய்வூதியர் சங்க வட்ட செயலாளர் பழ.அன்புமணி உள்ளிட்ட பொது இன்சூரன்ஸ் பணி யாளர்கள் கோட்ட அதிகாரிகள் எல்ஐசி, ஜிஜசி முகவர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி உரை ஆற்றினார். கூட்டத்தில் அரசு பொது இன் சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைத்திட வேண்டும். வாகன மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும். மக்களின் சேமிப்பான எல்ஐசி பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.