tamilnadu

img

அடிப்படை வசதி கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 29- திருச்சி உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையம் ஊராட்சியில் நூறு நாள் வேலை தொடர்ந்து வழங்க வேண்டும். குடிநீர், தெருவிளக்கு, சுகா தாரம்  உள்ளிட்ட அடிப்படை  வசதிகளை  நிறைவேற்ற வலியுறுத்தி திங்களன்று ஊராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் ராமச்சந்திரன் தலைமை யில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்ட செயலாளர் அ. பழநிசாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.முத்துக்குமார், விதொச ஒன்றிய தலைவர் ஏ.கணேசன், விதொச மாவட் டக்குழு உறுப்பினர் ஆர்.முத்துக் குமார், சங்கர் மங்கள்ராஜ், தங்கவேல், சுரேஷ், ஜானகி ஆகியோர் பேசினர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த துறையூர் காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலை மையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடை பெற்றது. இதில் வரும் 1ம் தேதி முதல் அனைவருக்கும் வேலை வழங்குவது. 10 நாட்களுக்குள் 16 போர்வெல்களை சரி செய்து மினிடேங்க் பராமரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய் வது. சாக்கடைகளை நாளை முதல் தூர்வார்வது என முடிவு செய்யப் பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.