கரூர், ஆக.23- கரூர் பரணி பார்க் கல்விக்குழுமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் ஷி.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். விழாவில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த மாணவ, மாணவிகளின் மாறுவேடப் போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.