tamilnadu

img

வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, மே 26வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் அபிராமி மஹாலில் சமுதாய விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டாம் வகுப்பில் 90 மதிப்பெண்கள் பெறும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, 9 மாவட்டங்களில் உள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து வேலைவாய்ப்பு அளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ்க்கு உதவியாளர்களாக நியமிப்பது ,எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம் ,ரயில்வே ,வங்கி ,ராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழி காட்டுவது மற்றும் பயிற்சி அளிப்பது, கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இதில் வேலம்மாள் மருத்துவக் கல்வி தலைவர் எம் வி முத்துராமலிங்கம் ,முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி, கல்வி ஆலோசகர் சிவகுமாரன் ,கல்வி குழுமம் நிர்வாகி கணேஷ் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.