tamilnadu

திருநங்கைகளுக்கு விருது  விண்ணப்பங்கள் வரவேற்பு

 திருச்சிராப்பள்ளி, பிப்.26- மூன்றாம் பாலினர்கள் இச்சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்பு களை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னே றியுள்ளனர். அவ்வாறு முன்னேறி இச்சமுதாயத்தில் சமநிலை  அடைந்துள்ளதே அவர்கள் படைத்த சாதனை. அவ்வாறு சாதனை படைத்த மூன்றாம் பாலினரை கவுரவிக்கும் வகை யிலும், மற்ற மூன்றாம் பாலினர்களை ஊக்குவிக்கும் வகையி லும் ‘திருநங்கையர் தினம்’ என அறிவிக்கப்பட்ட ஏப்ரல்  15 அன்று பாலினருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படும். இவ்விருதானது ரூ.1,00,000 காசோலை மற்றும் சான்று உள்ளடக்கியதாக உள்ளது.  எனவே மூன்றாம் பாலினர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருப்பவரா கவும், குறைந்தது 5 மூன்றாம் பாலினருக்காவது அவர்கள்  வாழ்க்கையில் முன்னேற உதவியும், மூன்றாம் பாலினர் நல  வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது என்ற விதி முறைகளை கொண்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்ப டுகின்றன. விண்ணப்பங்கள் பிப்.29 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரங்கள் பெற  அலுவலக தொலைபேசி எண் 0431-2413796-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

;