பெரம்பலூர், மே 22- ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பெரம்பலூரில், சிஐடியு ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வா கிகள் செல்லதுரை, ராஜரத்தினம், மல்லி முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் அகஸ்டின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசி னார்.
புதுக்கோட்டை
இதே போல் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் சி.அன்புமணவாளன், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, ஆட்டோ சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் சீனிவாசன், பொருளா ளர் மணிமாறன் உள்ளிட்டோர் பேசினர்.
கும்பகோணம்
ஊரடங்கால் வருமானமின்றி முடங்கி உள்ள ஆட்டோ தொழிலா ளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதியாக ரூ 15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலைப் போக்குவரத்து மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி, சிஐடியு பொறுப்பாளர்கள் நாகேந்தி ரன், சேகர், சங்கர், பக்கிரிசாமி, ஆட்டோ தொழிலாளர் சங்க திரு விடைமருதூர் ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் சரவணகுமார், துணைத் தலைவர் சரவணன், ஜோதி, அலாவுதீன், அம்மாசத்திரம் வெங்க டேசன், மகேந்திரன், திருவிடைமரு தூர் சங்கர், பூமிநாதன், திரு மங்கலகுடி பாரிஸ் நாச்சியார் கோவில் மணி, தாஸ், அவனியாபுரம் மன்சூர் அலி உள்பட ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.