tamilnadu

குடவாசல் அருகே வீட்டில் 21 பவுன் திருட்டு

குடவாசல், மே 12-குடவாசல் அருகே வடவேர் ஊராட்சி கோவில்பத்து மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் குமார்(52). தற்போது கோடை காலம் என்பதால் இவர் சம்பவத்தன்று இரவு புழுக்கத்தை தவிர்க்க காற்று வருவதற்கு வீட்டுக் கதவை முழுமையாக அடைக்காமல் தூங்கினார். இதைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 21 பவுன் நகையை திருடிச் சென்றனர். பின்னர் காலையில் இதை கண்டுணர்ந்த அவர் இதுபற்றி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.