tamilnadu

அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

ஓவியப்  போட்டி மாணவர் சாதனை

அறந்தாங்கி, அக்.18- புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மேல்நிலை மாணவர்களுக்கான ஓவியத் திருவிழாவில்(கார்ட்டூன்  வரைதல்) அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சூர்யபிரகாஷ் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மாணவருக்கு  பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பாராட்டி வாழ்த்துகள்  தெரிவித்தனர்.

மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை, அக்.18- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடு வாசல்கீழ்பாதி கிராமத்தில் வருகிற 24ஆம் தேதி காலை 10 மணி யளவில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து மனு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்கள் முகாம்

பெரம்பலூர், அக்.18- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யான மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் நபார்டு இணைந்து நடத்தும் அனை த்து வங்கிகளின் வாடிக்கை யாளர்கள் சந்திப்பு முகாம் வரும் 21, 22-ம் தேதி காலை 9 மணியளவில் பெரம்பலூர் பாலக்கரை பிரதான சாலை யில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் திருமண மஹா லில் நடைபெற உள்ளது.  முகாமில் விவசாய கடன், கல்வி கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன், தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன்கள் ஆகியவை பல்வேறு பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட உள்ளன. மேலும் இலவச தொழில் பயிற்சி பற்றிய தகவல்களும் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சி யரக செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.