tamilnadu

img

பள்ளி பொதுத்தேர்வில் தேர்ச்சி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாகப்பட்டினம், ஏப்.30-நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பல்லவன்ராயர் பேட்டையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நரிக்குறவர் இன மாணவர் மாணவியருக்காக உண்டு- உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் பயிலும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து கல்வியில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.2018-19-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 5 மாணவ- மாணவியரும், 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 8 மாணவ- மாணவியரும் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியர் திங்கட்கிழமை அன்று ஆட்சியர் சீ.சுரேஷ்குமாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மயிலாடுதுறை உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியை கே.கிருஷ்ணவேணி உடனிருந்தார்.

;