புதுக்கோட்டை, பிப்.9- புதுக்கோட்டை மாவட்ட த்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்பொழுது அறுவடைக்குத் தயா ரான நிலையில் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் பரவலாக கன மழை பெய்தது. இதனால், நெற்பயிர்கள் தரையோடு சாய்ந்தும் தண்ணீருக்குள் மூழ்கியும் சேதமடைந்துள்ளது. இத னால், கதிர் அறுவடை செய்ய முடியாமல் விவசாயி கள் திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செய லாளர் எஸ்.சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலளார் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் கே.சித்திரைவேல், சிஐடியு நிர்வாகி கே. கார்த்திக்கேயன் உள்ளிட் டோர் புதன்கிழமையன்று கந்தர்வகோட்டை வாட்டா ரத்தில் சேதமடைந்த நெல் வயல்களைப் பார்வையிட்ட னர். விவசாயிகளின் குறை களைக் கேட்டறிந்த அவர்கள், மழையால் விவ சாயிகள் மிகவும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானது அல்ல. எனவே, உரிய ஆய்வு செய்து தமிழக அரசு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டு மென வலியுறுத்தி உள்ள னர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.