tamilnadu

img

ஏவிசி கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சி

மயிலாடுதுறை, ஜூலை 28- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந் தல் ஏவிசி கல்லூரியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் கே.கார்த்திகேயன் தலைமை வகித்து அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவரின் சிறப்புகள் பற்றி பேசினார். கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், கணினியியல் துறை தலைவர் கே.தியாகராஜன், வேதியியல் துறை தலைவர் ஜி.விவே கானந்தன், பேராசிரியர் டிடி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசி ரியர் டாக்டர் கே.பழனிவேல் மற்றும் நூலக பணியாளர் கள் செய்திருந்தனர்.