அவிநாசி, ஜூலை 27- அவிநாசி பேரூராட்சி சார்பில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி சனி யன்று மரக்கன்று நடும் விழா நடை பெற்றது. அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டு நியூ எக்ஸ்டென்ஷன், துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்போர் நல சங்கத் தினர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது. அவிநாசியில் உள்ள ரிசர்வ் சைட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்பட்டன. இதில் செயல் அலு வலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் குடியிருப் போர் சங்க நிர்வாகிகள் வெங்கடேஷ், மருத் துவர்கள் செந்தில், சதீஷ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
களஞ்சியம்
இதேபோல் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, அவிநாசி அடுத்த பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் களஞ்சியம் விவசாய சங்கத்தினர் சனியன்று மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். இதில் களஞ்சியம் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிர மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.