திருச்சிராப்பள்ளி, ஆக.24- நாடு முழுவதும் 41 படைக்கலன் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 6 தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் 2 தொழிற்சாலைகள் திருச்சியில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் துப்பாக்கிகள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பணி நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த படைக்கலன் தொழிற்சாலை களை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சா லைகளின் ஊழியர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆனால் மத்திய அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் 41 படைக்கலன்கள் தொழிற்சாலைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து அறிவித்திருந்தனர். அதன்படி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளும், ஊழியர்களும் கடந்த 20-ம் தேதி முதல் 1 மாதம் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதே போல எச்ஏபிபி தொழிற்சாலை யில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேரும் வேலை நிறுத்தத்திலும் பங்கேற்றனர். சாலையில் சமைத்து, படுத்து தூங்கி போராட்டம் 2-ம் நாள் வேலை நிறுத்தப் போரா ட்டத்தின் போது காவல்துறையினர் போராட்டக்கா ரர்களை அப்புறப்படுத்த முயன்றதில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் மயங்கி விழுந்தார். தொடர் வேலை நிறுத்தப் போராட்ட த்தின் 3-ம் நாளான 22-ம் தேதி துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச்ஏபிபி தொழிற்சாலைகளின் ஊழியர்கள் குடும்பத்துடன் தொழிற்சாலை முன் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாடைகட்டி அதில் ஒரு பொம்மையை படுக்க வைத்து அதற்கு இறுதி சடங்கு செய்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் 4-ம் நாளான 23-ம் தேதி துப்பாக்கி தொழிற்சாலை முன் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் சாலையில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சமைத்ததை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு சாலையில் போர்வை விரித்து தலையணை வைத்து படுத்து தூங்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். இதே போன்று எச்ஏபிபி தொழிற்சாலை முன் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பலூன் போராட்டம் 5ம் நாள் போராட்டமான 24-ம் தேதி தொழிலாளர்கள் கருப்பு உடையணிந்து சேவ் ஓஎப்டி என பலூன்களில் எழுதி வானத்தில் பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச்ஏபிபி கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.