tamilnadu

குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை ஆற்றில் தள்ளி தற்கொலைக்கு முயன்ற தாய்

மகன் - மகள் உயிரிழப்பு

தஞ்சாவூர், ஜூலை 31-  தஞ்சையில் குடும்பத் தகராறு காரணமாக, இர ண்டு குழந்தைகளையும் ஆற்றில் தள்ளி விட்டு தற்கொ லைக்கு முயன்ற சம்பவ த்தில், ஆற்றில் விழுந்த மகன், மகள் பலியான நிலையில், காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரை அடுத்த சேப்பனாவாரி 2 ஆம் தெரு வைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி செந்த மிழ்செல்வி (38). இவர்க ளுக்கு ஸ்வேதா (12), கோ குல் செழியன்(3) என்ற இர ண்டு குழந்தைகள் உள்ள னர். இந்நிலையில் குடும்ப பிர ச்சனையில் கணவன் மனை விக்கிடையே அடிக்கடி தக ராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வியாழக்கி ழமை அதிகாலை 5.30 மணி க்கு, செந்தமிழ் செல்வி கல்ல ணைக் கால்வாய் ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் பாலத்தில் இருந்து தள்ளி  விட்டு, அவரும் குதித்து ள்ளார். குழந்தைகள் தண்ணீ ரில் விழுந்து அலறும் சத்தம்  கேட்டு, அக்கம் பக்கத்தி னர் ஆற்றில் குதித்து அவ ர்களை மீட்க முயற்சித்தனர். தகவல் அறிந்த வந்த தீய ணைப்பு வீரர்களும், ஆற்றில் குதித்து 3 பேரையும் மீட்க முய ன்றனர். இதில் செந்தமிழ்செல்வி யை மட்டும் உயிருடன் மீட்டனர். ஆனால் ஸ்வேதா, கோகுல் செழியன் இருவ ரையும் தண்ணீர் அடித்து  சென்றது. தொடர்ந்து தீய ணைப்பு துறையினர் அவ ர்களை தேடிய நிலையில், கண்டிதம்பட்டு அருகே கோகுல் செழியன் உடலை மீட்டனர். தொடர்ந்து, பொ ட்டுவாச்சாவடி அருகே ஸ்வேதா உடலை மீட்டனர்.  இதுகுறித்து, தஞ்சை மேற்கு காவல்துறையினர் செந்த மிழ்ச்செல்வி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரிடமும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.