tamilnadu

நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல் திருச்சியில் 64 மையங்களில் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- திருச்சி மாநகரில் கூடுதல் பணியாளர், மரு த்துவர்களை கொண்டு கொரோனா நோய்  பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு வீடு, வீடாக சென்று சோதனை நடத்த வேண்டும். திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கூடு தல் பரிசோதனையும், படுக்கைகள் மற்றும் மரு ந்துகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சித்தா, ஹோமியோ மருந்தகங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும். தனிமைப்படு த்தப்பட்ட முகாம், வீடுகளுக்கு உரிய உதவி களை செய்ய வேண்டும். மாநகரத்தில் 18  சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோ தனை நடத்த வேண்டும். 4 கோட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும். 10 நடமா டும் பரிசோதனை வாகனங்களை ஏற்பாடு செய்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மலைக்கோ ட்டை பகுதிக்குழு சார்பில் கிளைச் செயலா ளர் சண்முகம் தலைமையில் மரக்கடை, காந்தி மார்க்கெட், கருவாடுபேட்டை, இபிரோடு அம்பே த்கர்சிலை, பெரியகடைவீதி சவுக்கார்னர் உள்ளி ட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழுஉறுப்பினர் ஜெயபால், வழக்க றிஞர் ரெங்கராஜன், இங்கிலீஷ் காய்கறி சங்க குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.  உறையூர் பகுதிக்குழு சார்பில் பகுதிக்குழு செயலாளர் சந்திரபிரகாஷ் தலைமையில் குறத்தெரு, உய்யகொண்டான்திருமலை, பாண்டமங்கலம், முஸ்லீம்தெரு ஆகிய இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு  உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.  ஜங்சன் பகுதிக்குழு சார்பில் பகுதி செய லாளர் ரபீக் தலைமையில் தென்னூர் வஉசி  ரோடு, அரசமரத்தடி பஸ் ஸ்டாப், விக்னேஷ்  ஓட்டல், கூனிபஜார், பொன்நகர் 2வது கிராஸ்  ஆகிய இடங்களிலும், பொன்மலை பகுதிக்குழு  சார்பில் பகுதி செயலாளர் கார்த்திகேயன் தலை மையில் ஆர்மரிகேட், பொன்னேரிபுரம், ரஞ்சி தபுரம், சுப்ரமணியபுரம், ஏர்போர்ட், மாஜிரா ணுவ காலனி ஆகிய பகுதிகளிலும், ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் பகுதிசெயலாளர் வேளா ங்கண்ணி தலைமையில் தேவிதியேட்டர், திரு வானைக்காவல், நாலுகால்மண்டபம், சாத்தாரவீதி, உத்தமர்சீலியிலும், காட்டூர் பகு திக்குழு சார்பில் திருவெறும்பூர் பழைய ஆர்டிஓ அலுவலகம், பழைய பேருந்து நிலையம், மலை க்கோவில் மாரியம்மன்கோவில், நவல்பட்டு, அரி யமங்கலம் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. அந்தநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் போ தாவூர் மாரியம்மன் கோவில்திடல், குழுமணி கடைவீதி, முத்தரசநல்லூர் கடைவீதி, பெருக மணி கடைவீதி, பெட்டவாய்த்தலை பங்க் எதி ரில், கொடியாலம் கடைவீதி, புலிவலம் கடைவீதி  ஆகிய இடங்களிலும், பாலக்கரை, அபிஷேகபு ரம் பகுதிகள் உள்பட திருச்சி மாநகரில் 64 மை யங்களில் முகக் கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.